பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, வருவாய்த் துறை, வட்டவழங்கல் துறை நலத் திட்டங்கள் வழங்கல் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய இருசக்கர வாகனங்களை ஏலம்விட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, பாபநாசம் வட்டாட்சியர் க. ராணி, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், தனி வட்டாட்சியர் மலர்க்குழலி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.