தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் பகுதியில் அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிவந்த 10 மாட்டுவண்டிகளை பாபநாசம் வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம் சார் ஆட்சியர் மா. பிரதீப்குமார் உத்தவின்பேரில் பாபநாசம் வட்டாட்சியர் க. ராணி,மண்டலத் துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் பாபநாசம் பகுதியில் ஞாயிற்றுகிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
அப்போது வழுத்தூர் குடமுருட்டி ஆற்றில் மணல் அள்ளி வந்த 4 மாட்டுவண்டிகளையும்,மெலட்டூர் வெட்டாற்றில் மணல் அள்ளிய 3 மாட்டுவண்டிகளையும்,திருக்கருகாவூர் வெட்டாற்றில் மணல் அள்ளிய 3 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.