பட்டுக்கோட்டையில் ஜூலை 22இல் ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட 3-வது பேரவை பட்டுக்கோட்டையில் ஜூலை 22-ம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட 3-வது பேரவை பட்டுக்கோட்டையில் ஜூலை 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதை சிறப்பாக நடத்த வரவேற்புக் குழு அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் ஆர். தமிழ்மணி தலைமை வகித்தார். வட்டத் துணைத் தலைவர் க. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாவட்டப் பேரவையை சிறப்பாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.ராசகோபால் விளக்கினார். கூட்டத்தில், ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் மு. செல்லப்பன் வரவேற்புக் குழுத் தலைவராகவும், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களில் பொறுப்பிலுள்ள 25 பேர் உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டப் பேரவையை சிறப்பாக நடத்திட மேலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண. கல்யாணம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com