தஞ்சாவூரில் ஜூலை 6-இல் விளையாட்டுப் போட்டி

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 6-ம் தேதி நடைபெறவுள்ளன.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 6-ம் தேதி நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திரு ப்பது: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் 2017 - 18 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் ஜூலை மாதத்துக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 6-ம் தேதி நடைபெறவுள்ளன.
இதில், தடகளம், கையுந்துபந்து, கோ - கோ, நீச்சல் போட்டிகள் ஆகியவை 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ளன. மேலும், மாணவ, மாணவிகளுக்குத் தடகள விளையாட்டுப் பிரிவில் 100 மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், குழுப் போட்டிகளான கையுந்துபந்து, கோ - கோ போட்டிகளும் நடைபெறவுள்ளன.
குழுப் போட்டிகளில் பள்ளிகளிலிருந்து ஒரு அணி மட்டுமே கலந்து கொள்ளலாம். தடகளப் போட்டியில் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகள் கட்டாயம் தொடர்புடைய பள்ளியிலிருந்து சான்று பெற்று வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்குப் பயணப்படியோ, நாள் படியோ வழங்கப்பட மாட்டாது. இப்போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம். தடகளம், கையுந்துபந்து, கோ - கோ, நீச்சல் ஆகிய போட்டிகள் ஜூலை 6-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும். தாமதமாக வருவோர் போட்டிகளில் பங்கேற்க இயலாது.
தடகளப் போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கும், குழுப் போட்டியில் முதல் இரு இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com