தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் பங்குனி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பாபநாசம் தங்கமுத்து மகாமாரியம்மன் கோயிலில் உள்ள மூலவர் தங்கமுத்து மகா மாரியம்மன் மற்றும் சமயபுரம் மகா மாரியம்மன், துர்க்கையம்மன், சுந்தர மகாகாளியம்மன் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் செய்து,தூப,தீப,நெய்வேத்ய வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பெண்கள் பங்கேற்று நெய்விளக்கேற்றி,அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதேபோல, திருப்பாலைத்துறை வீரமாகாகாளியம்ன், அங்காளம்மன், மகாசக்தி காளியம்மன்,பாபநாசம், சிவசக்தி காளியம்மன்,கஞ்சிமேடு, செல்லியம்மன்,108 சிவாலயம், வீரமகா காளியம்மன்,பாபநாசம்,படுகை புதுத்தொரு சுந்தர மாகாகாளியம்மன் மற்றும் நல்லூர் ஸ்ரீகிரிசுந்தரி அம்மன் உடனுறை கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் தனி சன்னிதியில் அருள்பாலித்து வரும், குழந்தை வரமருளும் அஷ்டபுஜ மகா காளியம்மன் மற்றும் ஸ்ரீ சதுர்புஜமகா மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் பங்குனி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து அம்மனை தரிசித்தனர்.