தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக கூடிப்பிரியேல் இயக்கம் ஆர்ப்பாட்டம்

தில்லியில் அறவழியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூர் ரயிலடியில் கூடிப்பிரியேல் இயக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தில்லியில் அறவழியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூர் ரயிலடியில் கூடிப்பிரியேல் இயக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி நீர்ப்பாசன விவசாயப் பகுதிகளை வேளாண் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். பயிர் இழப்பீட்டுக்குப் போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலமுரளிகிருஷ்ணா தலைமை வகித்தார். அமைப்பாளர்கள் சதீஷ், ஹரிகார்த்திக், பிலோ ராஜ்குமார், ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com