பாபநாசம் அருகே குடிசை வீட்டில் தீ

பாபநாசம் அருகே வழுத்தூர், பூக்கொல்லை காலனித் தெருவைச் சேர்ந்தவர் செல்வமூர்த்தி (35),மாற்றுத்திறனாளி.

பாபநாசம் அருகே வழுத்தூர், பூக்கொல்லை காலனித் தெருவைச் சேர்ந்தவர் செல்வமூர்த்தி (35),மாற்றுத்திறனாளி. இவர் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை இவரது வீட்டருகேயுள்ள சீமைக் கருவேலமரங்களை வெட்டித் தீவைத்தனர். அப்போது அதிலிருந்து காற்றில் கிளம்பிய தீப்பொறி அருகிலிருந்த செல்வமூர்த்தியின் வீட்டில் விழுந்து தீப்பிடித்தது. தகவலின்பேரில் வந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த விபத்தில் ரூ. 10 ஆயிரம் மதிப்பில் சேதமானதாகக் கூறப்படுகிறது. அய்யம்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com