ஒரத்தநாடு அருகே வியாழக்கிழமை மனைவியை வெட்டி கொலை செய்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு தெற்குத் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி (55). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை ரெங்கசாமிக்கும் அவரது இரண்டாவது மனைவி வெள்ளையம்மாளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரெங்கசாமி வெள்ளையம்மாளை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த வெள்ளையம்மாள் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளையம்மாளின் மகன் முருகானந்தம் பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன், பாப்பாநாடு உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரெங்கசாமியை தேடி வருகின்றனர்.