கும்பகோணம் வட்டத்தில் மே 25ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
கும்பகோணம் வட்டத்துக்கான வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை எனப்படும் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேற்பார்வையில் அரசு வேலை நாட்களில் தினமும் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஜமாபந்தியின்போது அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக வழங்கி தீர்வு பெறலாம் என கும்பகோணம் வட்டாட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.