தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்திலிருந்து ஆவணம் செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்ட தனியார் பள்ளி அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
பச்சை கலர் கட்டம் போட்ட சட்டையும், வேஷ்டியும் அணிந்திருந்த நபர் காலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். திருச்சிற்றம்பலம் போலீஸார் சடலத்தை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இறந்தவர் யார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.