அனைத்துப் பகுதிகளிலும் இலவச சிகிச்சை முகாம்கள் நடத்துவது என இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் தீர்மானித்துள்ளது.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய இயற்கை மருத்துவ கவுன்சிலின் மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு இந்திய இயற்கை மருத்துவ கவுன்சிலின் தலைவர் எஸ். வெங்கடாசலம் தலைமை வகித்தார். தொடர்ந்து கவுன்சிலின் எதிர்கால செயல்திட்டம், சட்டரீதியான பாதுகாப்பு, மண்டல வாரியாக அமைப்பை ஏற்படுத்துவது குறித்து உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இயற்கை மருத்துவம் குறித்த இலவச சிகிச்சை முகாம்கள் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் சங்கத்தின் பொருளாளர் கே. வெள்ளைச்சாமி, தேசியக் குழு உறுப்பினர் கா. அரங்கநாதன், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் பங்கேற்றனர்.