தஞ்சாவூரில் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் இதயத்துல்லா மகள் ரேஹனாபேகம் (11). இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நவ. 11-ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்ப்பட்டார். அங்கு இவர் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். இவர் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்ததாகக் கூறப்படுகிறது.