கும்பகோணத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில்  வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில்  வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேசன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து உணவு பொருள்களையும் தடையின்றி வழங்க வேண்டும். சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை ரத்து செய்ய கூடாது. போர்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை ஊதியத்தை நிலுவையின்றி வழங்க வேண்டும்.100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிக்கும் அமல்படுத்த வேண்டும். குடிமனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும். பட்டதாரி பெண்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  வட்டாட்சியர் அலுவலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு,  மாவட்ட துணை செயலாளர் அறிவுராணி தலைமை வகித்தார். நகர செயலாளர் ஸ்ரீவித்யா,  நகரத் தலைவர் சுமதி, நகர பொருளாளர் கமலம், நகர துணை செயலாளர் தனலெட்சுமி, நகரகுழு உறுப்பினர் எஸ்.சுமதி, ஒன்றிய செயலாளர் மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலா, மனோன்மணி, கீதா, லதா, ஜோதி, சித்ரா, வெற்றிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து,  கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியரிடம் கொடுப்பதற்காக சென்றனர். அங்கு வட்டாட்சியர் இல்லாததால் அதன் பொறுப்பு அதிகாரியிடம் கொடுக்க சென்றனர். அவர் அந்த மனுவை வாங்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மாதர் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் (பொறுப்பு) ராமலிங்கம்,  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த மனுவை பெற்றுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com