பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 6,976 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமை வகித்தார். எம்.பி. கு. பரசுராமன், பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி. சேகர், வருவாய் கோட்டாட்சியர் ஆர்.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு ஆகியோர் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய வட்டங்களிலுள்ள 51 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 6,976 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட பால்வளத் தலைவர் ஆர்.காந்தி, பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் சுப.ராஜேந்திரன், ஆர்.ரவிச்சந்திரன், செல்ல.நாகராஜன், கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் பி.சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர்கள் எஸ்.மயில்வாகனன் பி.எஸ். பிரபு மற்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு வட்டங்களைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சி.வளர்மதி வரவேற்றார். பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பி.கிருஷ்ணம்மாள் நன்றி கூறினார்.