சட்டச் சேவைகள் தினத்தை முன்னிட்டு, பச்சக்கோட்டை கிராமத்தில் பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் இலவச சட்ட சேவைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் திங்கள்கிவமை மேற்கொள்ளப்பட்டது.
பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான
எஸ்.ராஜசேகர் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த இலவச சட்டசேவைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தில் வழக்குரைஞர்கள் எஸ்.பாலசுப்ரமணியன், டி.பன்னீர்செல்வம் மற்றும் வட்ட சட்டப் பணிகள்
குழுவின் தன்னார்வலர்கள் தனசேகரன், எஸ்.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் பச்சக்கோட்டை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது, வீடு வீடாக சென்று பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவச சட்ட சேவைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.