மாநில ஜூடோ போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவருக்கு பாராட்டு

மாநில ஜூடோ போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கும்பகோணம் அல்-அமீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாராட்டப்பட்டார்.

மாநில ஜூடோ போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கும்பகோணம் அல்-அமீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாராட்டப்பட்டார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான ஜூடோ போட்டிகள் நவம்பர் 12ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கும்பகோணம் அல்-அமீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 மாணவர்  ஏ.ஆகாஷ் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
இவருக்கு பள்ளியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தலைவர் முகமதுஇக்பால்,  தாளாளர் எம். கமாலுதீன்,  பள்ளி முதல்வர் சையத் அப்துல்சுபஹான்,  ஆலோசகர் செளந்தரராஜன், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள்,  பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com