அதிமுகவைப் பற்றிப் பேச தினகரனுக்கு தகுதி இல்லை: ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

அதிமுகவைப் பற்றிப் பேச தினகரனுக்கு தகுதி இல்லை என்றார் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம்.

அதிமுகவைப் பற்றிப் பேச தினகரனுக்கு தகுதி இல்லை என்றார் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம்.
பட்டுக்கோட்டையில் தொகுதி அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை நான் அதிமுகவில்தான் இருக்கிறேன். அதிமுகவைப் பற்றியோ, என்னைப் பற்றியோ பேச தினகரனுக்கு தகுதி கிடையாது.  தகுதி, விசுவாசம், திறமை உள்ள எவரும் அதிமுகவில் எந்த பதவிக்கும் வர முடியும். ஏமாந்த நேரத்தில் ஏற்றம் பெற்று விடலாம் என நினைக்கும் யாருக்கும் இந்த இயக்கத்தை சொந்தமாக்க விடமாட்டோம்.
தஞ்சையில் நவம்பர் 29ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை,  மற்ற மாவட்டங்கள் தஞ்சையை மிஞ்ச முடியாது என்கிற வகையில் சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.  எனவே,  அந்த விழாவுக்கு பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து திரளானோர் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்துக்கு, பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன், அதிரை பேரூர் செயலர் பிச்சை முன்னிலை வகித்தனர்.
எம்.பி. கு.பரசுராமன், பேராவூரணி எம்எல்ஏ  மா.கோவிந்தராஜ், மாவட்ட பால் வளத் தலைவர் ஆர்.காந்தி, முன்னாள் எம்எல்ஏ  பி.என்.ராமச்சந்திரன்,  மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஏ.மலையய்யன்,  மாவட்டப் பொருளாளர் வி.மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுக்கூர் ஒன்றியச் செயலர் துரை.செந்தில் வரவேற்றார். பட்டுக்கோட்டை நகரச் செயலர் சுப.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com