இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் அருகே புதுக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது விபத்தில் இறந்த தொழிலாளி அருள்தாஸின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு

தஞ்சாவூர் அருகே புதுக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது விபத்தில் இறந்த தொழிலாளி அருள்தாஸின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் வடக்குப் பகுதி பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் இரா. திருஞானம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத் துணைச் செயலர் மு.அ. பாரதி, ஒன்றியச் செயலர் ராமச்சந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் மோகன், ஏஐடியூசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com