பள்ளி மாணவர்களுக்கு டிச. 24-இல் திருவெம்பாவை பாட்டுப் போட்டி

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெறும் திருவெம்பாவை விழாவை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 24-ஆம் தேதி திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெறும் திருவெம்பாவை விழாவை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 24-ஆம் தேதி திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாட்டுப்போட்டி நடைபெறுகிறது.
 இதுகுறித்து தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றத்தின் செயலர் சோம. ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
எங்களது மன்றத்தின் சார்பில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான ஆதரவுடன், தஞ்சை பெரியகோயில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை ஒத்துழைப்போடு நிகழாண்டு திருவெம்பாவை விழா தஞ்சாவூர் பெரியகோயிலில் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.  இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 24-ஆம் தேதி திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாட்டுப்போட்டி நடத்தப்பட உள்ளது.
போட்டிகள்  3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூவருக்கு பரிசுகளும், பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.
 பள்ளித் தலைமையாசிரியர் மூலமாக அனுப்பப்படும் மூன்று குழந்தைகள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். போட்டிக்கான மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலை டிச. 16-ஆம் தேதிக்குள் சோம. ஆறுமுகம், 152/2630, ஆறுமுக ஆசாரி சந்து, தெற்கு வீதி, தஞ்சாவூர் 613 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, 04362- 239087, 95242 25840 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com