மன்னை விரைவு ரயிலை தஞ்சாவூர் வழியாக இயக்க வலியுறுத்தல்

மன்னை விரைவு ரயிலை தொடர்ந்து தஞ்சாவூர் வழியாகவே இயக்க வேண்டும் என சுஜானா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மன்னை விரைவு ரயிலை தொடர்ந்து தஞ்சாவூர் வழியாகவே இயக்க வேண்டும் என சுஜானா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மன்னையில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு இரவு நேரத்தில் செல்லும் மன்னை விரைவு ரயிலை மார்ச் 1-ம் தேதி முதல் தஞ்சாவூருக்கு செல்லாமல், வேறு வழித்தடத்தில் செல்லும் என்ற தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தஞ்சாவூர் நகரம் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வரும் ரயில் வேறு வழித்தடத்தில் செல்லும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று எப்போதும்போல தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
நகரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் மழை நீர் நிரம்பி மேடு, பள்ளம் தெரியாமல் பெண்கள் மற்றும் வயதானவர்கள் விழுந்து எழும் நிலை உள்ளது. எனவே, நகரில் உடனடியாகப் புதிய சாலை அமைக்க வேண்டும். நகரில் எரியாத தெரு விளக்குகளைச் சீர் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத் துணைத் தலைவர் ஆர். சதாசிவம் தலைமை வகித்தார். செயலர் தரும. கருணாநிதி, துணைத் தலைவர்கள் ஜி. பொன்னியின்செல்வன், ஜி. சுப்பிரமணியன், துணைச் செயலர்கள் கே. நடராஜன், பி. செல்வம், டி. ரவி, செயற்குழு உறுப்பினர் எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com