பேராவூரணி அருகே சாலையில் சென்ற மாட்டின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மீனவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகிலுள்ள அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் நாகூர்பிச்சை மகன்ஆல்பர்ட்(32) . இவர் தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தில் தங்கி, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். குப்பத்தேவன் அருகே வந்தபோது, நிலைதடுமாறி எதிரே வந்த மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மாடும் உயிரிழந்தது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.