மாற்றுத்திறனாளிகள் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை பெற ஆட்சியரகத்தில் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்காக வருமான வரம்பின்றி முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அடையாள அட்டை பெறுவதற்கான பதிவுகளை மேற்கொள்ள ஆட்சியரகத்தில் பிரதி சனிக்கிழமை தோறும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற்றிடாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளியை குடும்ப உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள் புதிய ஆட்சியரகத்தில் அறை எண் 15-இல் செயல்பட்டு வரும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலகத்தில் (மக்கள் குறைதீர் கூட்ட மனுக்கள் பதிவுசெய்யும் இடம்) மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றுகளுடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டின் தஞ்சாவூர் மாவட்ட திட்ட அலுவலர் 73730 04550 மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் 04362-236791 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.