தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியத்தில் மதுக்கூர் வடக்கு, ஆலத்தூர், கீழக்குறிச்சி, பெரியக்கோட்டை, சிரமேல்குடி, வேப்பங்குளம் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் விதைப்பை வலியுறுத்தி தெருக்கூத்து விழிப்புணர்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் தயாளன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆடல், பாடல் மூலம் தெருக்கூத்து இயக்கத்தினர் நேரடி நெல் விதைப்பு குறித்த தொழில் நுட்பங்களை விளக்கினர். வேளாண் அலுவலர் நவீன் சேவியர், துணை அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.