ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 11 கோயில்களில் புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆண்டுக்கு ஆறுஅபிஷேகம் கண்டருளும் நடராஜ பெருமானுக்குரிய அபிஷேக தினமான புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு, தாராசுரம், பட்டீஸ்வரம், திருசக்திமுற்றம், அவளிவநல்லூர், கூகூர், திருப்பாம்புரம், மருதூர், திருத்தலையாலங்காடு, திருச்சாய்க்காடு, திருப்பல்லவனேஸ்வரம், திருவிடைக்கழி ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் அடியார்கள் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.