பந்தநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.10 லட்சம் திருட்டு

பந்தநல்லூர் குத்தாலம் சாலையை சேர்ந்த சர்புதீன் மனைவி ரபியாபேகம் (48). இவரது மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

பந்தநல்லூர் குத்தாலம் சாலையை சேர்ந்த சர்புதீன் மனைவி ரபியாபேகம் (48). இவரது மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,  கடந்த 3ஆம்  தேதி உடல்நிலை சரியில்லாததால்,  வீட்டை பூட்டிவிட்டு   அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் 4ஆம் தேதி காலையில் வீட்டுக்கு வந்தபோது,  வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டினுள் சென்று பார்த்தபோது,  பீரோவில் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் பணமும்,   8 கிராம் மோதிரம்,  தோடு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து ரபியாபேகம் அளித்த புகாரின்பேரில், பந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com