தஞ்சை மாவட்டத்தில் அக். 31-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கருவூலத்தில் அக். 31-ம் தேதி ஓய்வூதியருக்கான மாதாந்திர குறை தீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட கருவூலத்தில் அக். 31-ம் தேதி ஓய்வூதியருக்கான மாதாந்திர குறை தீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலர் எஸ். நடராஜன் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு அரசின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மாதாந்திர குறை தீர் கூட்டம் அக். 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட  கருவூலத்தில் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்களில் நிலுவையிலுள்ள குடும்ப ஓய்வூதியம், வாழ்நாள் நிலுவை, குடும்பப் பாதுகாப்பு நிதி விண்ணப்பங்கள், திருந்திய ஓய்வூதியங்கள், கூடுதல் ஓய்வூதியம் போன்ற தங்களது கோரிக்கைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பத்தில் "ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள்கூட்ட விண்ணப்பம்" என தலைப்பிட்டு மாவட்ட கருவூல அலுவலருக்கு அக். 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.   
தஞ்சாவூர் மாவட்ட கருவூல அலுவலரின் அதிகார வரம்புக்குட்பட்ட அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குறை தீர் கூட்டத்தின்போது உரிய ஆணைகள் வழங்கப்படும்.
மேலும், கூட்டத்தின்போது, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாளஅட்டைக்கான விண்ணப்பங்கள் பெறுதல், ஓய்வூதியப் புத்தகங்களில்
பதிவுகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட ஓய்வூதியம் தொடர்பான சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com