தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரண்மனை வளாகத்தில் உள்ள பதிப்புத் துறையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி தொடங்கப்பட்ட 50 சத சிறப்புக் கழிவு நூல்கள் விற்பனை அக். 17-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு 04362 - 274581 என்ற எண்ணிலும், presstamiluniversity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என பதிவாளர் ச. முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.