அக். 25-இல் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க் கூட்டம் அக். 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க் கூட்டம் அக். 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செயற்பொறியாளர் சீ. கிருஷ்ணவேணி மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் த.நா. சங்கரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தஞ்சாவூர் நகரியக் கோட்டத்துக்குள்பட்ட நகர எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கீழ வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக் கல்லூரி சாலை ஆகிய பகுதிகளைச் சார்ந்த மின் நுகர்வோர் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com