தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்களாக மழை பெய்யாவிட்டாலும், வானில் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
கல்லணை 11.2, அணைக்கரை 10, பூதலூர் 5.6, அதிராம்பட்டினம் 3.4, திருக்காட்டுப்பள்ளி 2.6, மஞ்சலாறு 1.6, தஞ்சாவூர் 1.