தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி சார்பில் சனிக்கிழமை பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாபநாசம் பேரூராட்சி சார்பில் பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் டெங்கு கொசு புழு உற்பத்திக்கான காரணிகள் அப்புறப்படுத்தப்பட்டு, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு புழு ஒழிப்பு மருந்தும், டெங்கு கொசு அழிப்பு புகை மருந்தும் அடிக்கப்பட்டன.
மேலும் பாபநாசம் காப்பன் தெருவிலுள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து நீரேற்றம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டன. இந்தப் பணிகளை பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் நா.மனோகரன் நேரில் பார்வையிட்டு தக்க ஆலோசனைகள் வழங்கினார்.