காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறப்பு: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கல்லணையில் இருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்லணையில் இருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மேட்டூர் அணையிலிருந்து செப். 12-ஆம் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் சனிக்கிழமை காலை வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் காவிரி ஆற்றைக் கடக்க வேண்டாம். மேலும், காவிரியில் புனித நீராடும் பக்தர்களும் கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com