புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஏப்.12 முதல் 158 ஆவது நாளாக சனிக்கிழமையும் அப்பகுதியினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து, ஏப்.12
ஆம் தேதி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.
தொடர்ந்து, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்கள், நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 158-வது நாளாக சனிக்கிழமை அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் , திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.