தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை செங்குந்தர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், இலக்கியவாதியுமான வீ.பி. கலியமூர்த்தி (81) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானார்.
பாபநாசம் பத்திரிகையாளர் சங்க கௌரவத் தலைவரான இவர் கலாநிதி, அக்னி சிறகுகள் உள்பட பல பட்டங்களை பெற்றுள்ளார். பாலைத்துறை சோலையப்பர், வீ.பி.கே. மூர்த்தி, கலாநிதி எனும் பெயர்களில் தினமணி உள்பட பல்வேறு பத்திரிகைகளில் ஆன்மிக கட்டுரைகள் எழுதி வந்தார்.
இவருக்கு கே. கனகாம்புஜம் என்ற மனைவியும், செல்வன், கணேசன், சிவபாலன் ஆகிய மகன்களும், எஸ். அகிலா என்ற மகளும் உள்ளனர். இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. தொடர்புக்கு: 94428 88281.