தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் முந்திரி தோப்பில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் தூக்கில் தொங்கிய நிலையில் திங்கள்கிழமை மாலை இறந்து கிடந்தார். தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். சடலம் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் இறந்து 4 நாட்களைக் கடந்திருக்கும் என போலீசார் கருதுகின்றனர். இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை.
இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.