ஒரத்தநாடு வட்டம், கண்ணதங்குடி கீழையூர் ஆண்டிநத்தம் காடு பகுதியை சேர்ந்த அழகர் மணைவி கண்ணாமணி(70).
இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கண்ணாமணி கழுத்தில் இருந்த ஐந்து பவுன் சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கண்ணாமணி அளித்த புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.