குடந்தை அரசு கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி முதல்வராக அ. குருசாமி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.


கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி முதல்வராக அ. குருசாமி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை தேசிய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் முதல்வராகப் பணியாற்றி வந்த முனைவர் பட்டம் பெற்ற அ. குருசாமி, முதல்நிலை கல்லூரி முதல்வராகப் பதவி உயர்வு பெற்று, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கல்லூரிக் கல்விப் பணியில் 29 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். புதிய முதல்வரை கல்லூரி பேராசிரியர்கள், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து
வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com