ஒரத்தநாட்டில் மாற்றுத்திறனாளிகள் மௌன ஊர்வலம்

ஒரத்தநாட்டில் தஞ்சை மாவட்ட மாற்றுத் திறனாளிகள், காது கேளாதோர், வாய் பேசாதோர் நலச் சங்கம் சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.

ஒரத்தநாட்டில் தஞ்சை மாவட்ட மாற்றுத் திறனாளிகள், காது கேளாதோர், வாய் பேசாதோர் நலச் சங்கம் சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் காது கேளாத,  வாய்பேச முடியாத பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்,  மத்திய-மாநில அரசுகள் போக்ஸோ சட்டத்தை கடுமையாக்க வேண்டும், பெண் குழந்தைகளை பாதுகாப்பது சமூகத்தின் கடமை, பெண்குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் , விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் நடைபெற்ற இந்த மௌன ஊர்வலம் ஒரத்தநாடு பெரியார் சிலை பகுதியில்  தொடங்கி,  வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com