அஞ்சல்தலை கண்காட்சியில் புதிய அஞ்சல் உறைகள் வெளியீடு

கும்பகோணத்தில் அஞ்சல்துறை சார்பில் திருச்சி மத்திய மண்டல அளவிலான குடந்தை பெக்ஸ் - 2018 என்ற அஞ்சல்தலை கண்காட்சியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை புதிய அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டன.

கும்பகோணத்தில் அஞ்சல்துறை சார்பில் திருச்சி மத்திய மண்டல அளவிலான குடந்தை பெக்ஸ் - 2018 என்ற அஞ்சல்தலை கண்காட்சியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை புதிய அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டன.
கும்பகோணம் மகாமகக் குளத்தின் தென் கரையில் உள்ள திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இக்கண்காட்சியில் பிரிட்டிஷ் இந்தியா வெளியிட்ட முதல் அஞ்சல்தலை, சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல்தலை, பல்வேறு தலைவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல்தலைகள், உள்நாட்டுக் கடிதம்,  பல தலைவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் உறைகள், பல்வேறு நாடுகளில் அச்சடிக்கப்பட்ட அஞ்சல்தலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை கும்பகோணத்துக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக கும்பேசுவரர் கோயில் கல் நாகசுரம், சுவாமிமலை பாரம்பரிய சோழர் கால சிலை வடிவமைப்பு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு ஆகியவை பொறிக்கப்பட்ட புதிய அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டன. மேலும், இக்கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். 
இக்கண்காட்சி தொடர்ந்து சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com