அலிவலம் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட அலிவலம் கிராமத்தில் இருக்கும் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. மதியம் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு அமாவாசை ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.