தஞ்சையில் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கான தேர்வு: 65 பேர் எழுதினர்

தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சனிக்கிழமை நடத்திய உதவித் தோட்டக்கலை அலுவலர் பணிக்கான தேர்வில் 65 பேர் எழுதினர்.


தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சனிக்கிழமை நடத்திய உதவித் தோட்டக்கலை அலுவலர் பணிக்கான தேர்வில் 65 பேர் எழுதினர்.
இத்தேர்வை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்தது: இத்தேர்வில் பங்கேற்க மாவட்டத்தில் 76 பேர் விண்ணப்பம் செய்தனர். இவர்களில் 65 பேர் தேர்வு எழுதினர். வருகை விகிதம் 85.5 சதவீதம். காலையில் பாடத் தேர்வும், மாலையில் பொது அறிவுத் தேர்வும் நடைபெற்றது. இம்மையத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன என்றார் ஆட்சியர். மேலும், இத்தேர்வு மையத்தில் வெப் கேமரா பொருத்தப்பட்டு, அதன் மூலம் கண்காணிக்கப்பட்டது. தவிர, ஆய்வு அலுவலர்கள், பறக்கும் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com