பட்டுக்கோட்டையில் கூட்டுறவு நகர வங்கி நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு

பட்டுக்கோட்டையில் கூட்டுறவு நகர வங்கி நிர்வாகிகள் 11 பேர் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


பட்டுக்கோட்டையில் கூட்டுறவு நகர வங்கி நிர்வாகிகள் 11 பேர் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வங்கித் தலைவராக நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஜெ.சம்பத், துணைத் தலைவராக பா.மாரிமுத்து மற்றும் 4 பெண்கள் உள்பட 9 பேர் உறுப்பினர்களாக போட்டின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரியும், கூட்டுறவு சார் பதிவாளருமான எம்.பொய்யாமொழி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, எஸ்.ஜெ.சம்பத் தலைவராக பதவியேற்றார். அடுத்து, துணைத்தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஏ.மலையய்யன், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன், நகரச் செயலர் சுப.ராஜேந்திரன், வங்கி மேலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com