பட்டுக்கோட்டையில் கூட்டுறவு நகர வங்கி நிர்வாகிகள் 11 பேர் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வங்கித் தலைவராக நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஜெ.சம்பத், துணைத் தலைவராக பா.மாரிமுத்து மற்றும் 4 பெண்கள் உள்பட 9 பேர் உறுப்பினர்களாக போட்டின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரியும், கூட்டுறவு சார் பதிவாளருமான எம்.பொய்யாமொழி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, எஸ்.ஜெ.சம்பத் தலைவராக பதவியேற்றார். அடுத்து, துணைத்தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஏ.மலையய்யன், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன், நகரச் செயலர் சுப.ராஜேந்திரன், வங்கி மேலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.