கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 4 வது கட்டமாக நடைபெறுகிறது. இதில் கிராம மக்கள் பங்கேற்று சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பிறப்பு, இறப்பு சான்று, முதல் பட்டதாரி சான்று ஆகியவைகளை உரிய ஆவணங்களோடு நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கும்பகோணம் வட்டாட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.