பட்டுக்கோட்டை சிவக்கொல்லை ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த எஸ். வீரையன் மகன் சரவணன் (28). தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் தொழிலாளி.
இவர் சனிக்கிழமை வீட்டிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் பால் வாங்க கடைக்குச் சென்றுள்ளார்.
அதே பகுதியிலுள்ள எஸ்வி நகர் 1-வது தெரு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த மினி லாரி, சரவணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரவணன் அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து மினி லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டாராம்.
புகாரின்பேரில், பட்டுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் என்.அன்பழகன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.