இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவர் சாவு

பேராவூரணி பேரூராட்சி  கூப்புளிக்காடு பகுதியை சேர்ந்தவர் அ. நீலகண்டன்(32).ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.

பேராவூரணி பேரூராட்சி  கூப்புளிக்காடு பகுதியை சேர்ந்தவர் அ. நீலகண்டன்(32).ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில்   அறந்தாங்கியில் இருந்து பேராவூரணிக்கு வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம்,  மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்(18) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில்  பேராவூரணியில் இருந்து மேற்பனைக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.  
எதிர்பாராதவிதமாக சித்தாதிக்காடு  அருகே இருவரும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 
இருவரும் பலத்த காயமடைந்தனர். 
அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,  மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு செல்லும் வழியில் நீலகண்டன்  உயிரிழந்தார். ராஜ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பேராவூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com