கயிறு கைவினைப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர் அருகேயுள்ள கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் கயிறு கைவினைப் (ஆர்டிசன்) பயிற்சி பெற டிச. 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தஞ்சாவூர் அருகேயுள்ள கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் கயிறு கைவினைப் (ஆர்டிசன்) பயிற்சி பெற டிச. 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம்மையத்தில் 6 மாத கால கயிறு கைவினைப் பயிற்சி வகுப்பில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சிக்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இப்பயிற்சியின்போது மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு விடுதி வசதி உண்டு. இப்பயிற்சி வருகிற 2019 ஜன. 1-ம் தேதி தொடங்கப்படும். 
இதில், சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். 
w‌w‌w.​c‌o‌i‌r​b‌o​a‌r‌d.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். 
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மையத்துக்கு டிச. 21-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04362 - 264655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com