பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 147 குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் 22 பொருள்கள் அடங்கிய நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பாபநாசம் வட்டார பகுதியில் அண்மையில் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட 147 குடும்பங்களுக்கு பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ், 22 பொருள்கள் அடங்கிய நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதில் மண்டல துணை வட்டாட்சியர்கள், சரக வருவாய் அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.