பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் நடவு செய்வதற்காக சத்துணவு அமைப்பாளர்களிடம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பாலமுரளி முன்னிலையில் பாபநாசம் ஒன்றியத்துக்குட்பட்ட சத்துணவு மையங்களை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்களிடம் முருங்கை, பப்பாளி உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.