தீ விபத்தில் இளம்பெண் சாவு

தீ விபத்தில் சிக்கிய இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தீ விபத்தில் சிக்கிய இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 தஞ்சாவூர் தெற்கு மானோஜிப்பட்டி சோழன் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. கூலித்தொழிலாளி. இவரது மகள் மஞ்சு (17). ஒன்பதாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
திங்கள்கிழமை மாலை சமைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது தீ பற்றியதாகக் கூறப்படுகிறது. 
அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், மஞ்சுவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை காலையில் இறந்தார்.  இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com