அதிராம்பட்டினத்தில் பைத்துல்மால் சேவை அமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இதில், வரும் மே மாதம் அதிரையில் பைத்துல்மால் சேவை அமைப்பு சார்பில் 2 நாள் திருக்குர் ஆன் மாநாடு, 1 நாள் மத நல்லிணக்க மாநாடு ஆகியவற்றை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அந்த அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.கே.எம்.ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத், செயலர் எஸ்.ஏ. அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம்.முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் ஏ.முனாப் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.