கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கணினிப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்புக் குறுகிய கால கணினிப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்புக் குறுகிய கால கணினிப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து நிலைய முதல்வர் எல். அன்பு பசும்படியார் தெரிவித்திருப்பது: சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்புக் குறுகிய காலப் பயிற்சிகளான டி.சி.ஏ., டேலி, டி.டி.பி., எம்எஸ். ஆபிஸ் ஆகியவற்றில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்வோரின் வசதிக்காக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில், சேர குறைந்தபட்சம் 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு இல்லை. தகுதி பெற்ற அனைவரும் இப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு அரசு சார்ந்த தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியச் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் சென்று விண்ணப்பம் பெற்று நிறைவு செய்து சேர்ந்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி பெறுபவர்கள் வசதிக்காகக் கணினி தட்டச்சு பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, இப்பயிற்சியில் சேர்ந்து வேலைவாய்ப்பைப் பெறலாம். 
மேலும் விவரங்களுக்கு 04362 - 237426, 9942225281 ஆகிய எண்களில் தொடர் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com